சென்னை பெரியமேடு மசூதி அருகே உள்ள ஒரு வீட்டின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்த தவெக எம்எல்ஏ முஸ்தபா, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இளைஞர் சினிமா பாணியில் மீட்கப்பட்டார். இளைஞர் கேரளாவைச் சேர்ந்தவரும் என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.